Friday, June 09, 2006

பழைய வீடு


கூரையின்
முகத்தில் அறையும்
மழையைப்பற்றிய
எந்தக்கவலையும் அற்றது
புது வீடு

இலைகளை உதிர்த்தும்
காற்றைப்பற்றியும்
இரவில் எங்கோ
காடுகளில் அலறும்
துர்ப்பறவையின் பாடலைப்பற்றியும்
எது விதமான துயரமும் கிடையாது
புது வீட்டில்

ஆனாலும் என்ன
அதன்
பெரியயன்னல்களினூடேநுழையும்
நிலவிடம்
துளியும் அழகில்லை......

த.அகிலன்

1 comment:

முபாரக் said...

நன்றாய் வந்திருக்கிறது கவிதை. நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்