Friday, June 30, 2006

புன்னகை விற்பவள்


நதி
அதன் புன்னகையை
ஒழிக்கிறது
கடல்மடியில்

அவள்
அனாசயமாய்
அதை எடுத்துச்சூடுகிறாள்
தன் கழுத்தில்

நிலவு
வானில் வரையும்
அவள்
கைகளிற்குச் சிக்காத
ஒளியின் புன்னகையை

அவள் என் புன்னகையை
விற்றுக் கொண்டிருக்கிறாள்...

தான்
நட்சத்திரங்களை
உதிர்ப்பதறியாது

ஒரு
பூவின் புன்னகை
செத்துக் கொண்டிருக்கிறது
அவள் கூந்தலில்

த.அகிலன்

No comments: