Monday, June 26, 2006

என்னுள் இருக்கும் நீ


என் கவிதைகளில்
பேசமுடியாத
வேதனை
உன்னிடமேயிருந்திருக்கிறது

சில பொழுதுகளில்
வாளின் கூர்முனைகளை
வென்று
வலிக்கிறது
உன் மௌனம்...

ஒரு மின்விசிறியின்
முதுகைப்போல்
நீ
உதிரவிடும்
வார்த்தைகளில்
பின்னப்பட்டிருக்கும்
வெறுமை
என்
கனவுகளை சிறையெடுக்கும்.

எனக்காய்
நீ
உதிரவிடும்
புன்னகையின் போதாயிருக்கலாம்
சிறைமீட்பு

த.அகிலன்

1 comment:

சேதுக்கரசி said...

நல்லா இருக்கு அகிலன். படங்களும் சூப்பரா தேர்ந்தெடுக்கிறீங்க.