Tuesday, June 27, 2006

மெளனத்தின் சங்கீதம்...


கண்களில்
கேள்விகளோடு அலைகிறார் மனிதர்
மௌனம் காதுகளில்
இரைகிறது…..

தொடர்ச்சியாய்
உதைக்கும் கடிகாரம்
நின்று போகையில்…..

மரங்கள்
ப+க்களைப்பிரசவிக்கும் போதான அலறல்
நிச்சயமாய்
கேட்கிறது எனக்கு…

வானெங்கும் விரியும்
நிலவின் ஓவியத்தையும்
ரகுமானை வென்று வருடுகிற
மௌனத்தின் சங்கீதத்தையும்
ரசிக்க முடிகிறது…

அன்பே
நிசப்தத்தில்
என்
காதுகளை மூடுகிறேன்
மனங்களின் இரைச்சல் தாளாமல்

உன் பிரிவின்பின்
இப்படித்தான்
ஒன்றோடொன்று ஒட்டாமல்
உதிர்கிறது
எனக்கான வார்த்தைகள்

த.அகிலன்

No comments: