Thursday, June 29, 2006

மழை.....


ஒருநீண்ட தார்ச்சாலையில்
சோவெனத்துரத்தும்
மழையென விரட்டுகிறது
உன்பிரிவு.

ஒரு
கொடுமிருகத்தைப்போல்.

எதிரே விரியும்
பெருவெளியின் நீளத்தை
என் கால்கள்
விழுங்க விழுங்க.

மறுபடியும்
முடிவற்று விரிகிறதுவெளி
உனை அழைக்கும்குரல்
தொண்டைக்குள் தேங்க
எனை விழுங்கிப்போகிறது மழை.

த.அகிலன்

No comments: