Friday, June 09, 2006

காத்திருப்பின் வலி


காத்திருப்பின் வலி
மரமொன்றின்
கிளையிருந்து உதிர்கிறது

நம்பிரிவின்
முதற்கணத்தில்
நீ
சிந்திப்போன
புன்னகையும்
பார்வைகளும்
ஓர்
ஓவியமாய்
உறைந்துபோனது,

கிழிபடாத
நாட்காட்டியின்
துயரம்போலத்
தொலைகிறது
என் காதல்.

ஆனாலும்
பெண்ணே
நம்
சிலிர்த்துப்போன
நினைவுகளின் கணங்கள் மட்டுமே
போதுமானவை
என் காத்திருப்புக்கு..

த.அகிலன்

No comments: