Sunday, June 25, 2006

தேவதைகளின் தேவதைக்கு


அன்பே
உன் நினைவுகளில்
நொருங்கும் என்னிதயத்தை
நீயே வைத்துக்ககொள்…..

என்
தேவதையே
பாசாங்குகள்
எதுவுமற்ற
மெல்லிய மலர்
என் இதயம்
நீ
நீ மட்டும் தான்
வேண்டும் அதற்கு…
சர்வநிச்சயமாய்
வாழ்வின் நீளத்துக்கும்
நீ மட்டும் தான்
வேண்டும் அதற்கு…

என்
புன்னகையின்
ஒரத்தில் இருக்கின்ற
அன்பின் பெரும்வலியை
எப்படிச்சொல்லுவது…..

தேவதைகள்
யாரும் புகமுடியா என்னிதயம்
தேவதைகளின் தேவதையே
உன்னால் தான்
நொருங்கிற்று
கொஞ்சம் இரங்கிவா
என் இதயத்துள் இறங்கு

த.அகிலன்

1 comment:

ப. அருள்நேசன் said...

அகிலன் உனது கவிதைகளின் வார்த்கைச் செழிப்பை உணர்வின்
உந்துதலை மீண்டும் பார்க்கவேண்டும் போலுள்ளது
இத்தனை அழகான கவிதைகளின் காதலன் எங்கே என்று
தேடிக்கொண்டிருக்கிறது மனசு....

ப.அருள்நேசன்