
எனது வெள்ளைச் சட்டையில்
இரத்தம் படிந்து பிசுபிசுப்பாய் ஒட்டியது
நாற்றம் மூக்கைக் குமட்டிற்று
எனது பள்ளியோ
கூரை கொட்டிப்போய்
கரும்பலகை நிறமிழந்து
வெண்கட்டி சிவந்து கசிந்து
கதிரையோ
வெறும் பலகைத்துண்டங்களாய்
சுவர்களில்
சன்னங்களால் யன்னல்கள் முளைத்தது
நசிந்து போனது வாழ்வு
என் பள்ளிக்கூடம் பற்றிய கனவுகளும்
சாவின் அலறல்களுக்கிடையில்
அடையாளமற்றனவாய்…
த.அகிலன்
No comments:
Post a Comment