Sunday, June 25, 2006

கனவுகளில் நுழையும் பூனை


அழுதுவடியும்
விளக்கு
தோற்றுப்போகிறது
இருளிடம்

எங்கும்
நிரப்பிக்கொண்டேயிருக்கிறது
இருள்
தன்னை.

ஒளியற்றவெளியில்
பதுங்கிக்கிடக்கும்
உன்
புன்னகை
ஒரு திருட்டுப்பூனையைப்போல்
நுழைகிறது
கனவுகளில்..

அதன்
கால்களில்
இடறி
கறிச்சட்டியைப்போல்
நொறுங்கும்
என் தூக்கம்

த.அகிலன்

1 comment:

ப்ரியன் said...

அழகான வித்தியாசமான ஒப்பீடோடு ஒரு காதல் கவிதை மிக நன்றாக இருக்கிறது1

வாழ்த்துக்கள்!