Saturday, June 10, 2006

நிமிர்ந்து நடக்கும் நதி


ஒரு
புன்னகை
கடந்துபோகிறது

நிமிர்ந்து நடக்கும்
நதியைப்போல…..

சட்டென்று
பின்தொடர்ந்து
முழிக்கிறது மனசு
வாகனங்களின்
தெருவில் மாட்டிக்கொண்ட
ஒரு
குழந்தையைப்போல,

யாரும்
கண்டுகொள்ளாத
குழந்தையின் கண்ணீர்
எனக்குள் நுழையும்
ஒரு
நதியின் கவிதையென

வாகனங்களின்
இரைச்சலையும்; மீறி
என்
காதுகளை அடைகிறது.
புல்லாங்குழலின்
சங்கீதம்

த.அகிலன்

No comments: