Saturday, October 07, 2006

நிர்ப்பந்தம்

அலைகிறது மனசு
அப்படியே
ஸ்தம்பித்துப்போன
வாழ்வின் நினைவெழுந்து
மனவெளியெங்கும் அலைகிறது..

நிலவின் பின்னழகு போலவே
நிதர்சனங்களும்
விழிகளுக்கு தெரியாமலே....

முகங்களின் கொந்தளிப்பில்
மூடிவைக்கப்படுகின்றன மனசுகள்...

வா
நானும் நீயும்
திறந்த மனசோடு
காற்றைப்போல்
எங்கும் நுழைவோம்..

எனக்கு நானும்
உனக்கு நீயும்
எல்லைகள் வகுத்துக்கொண்டு
வறண்டுபோகாமல்
எனக்கு உன்னையம்
உனக்கு என்னையும்
முழுவதும் காட்டுகிறவரை
இருட்டுக்குள் இருக்கிற
நம் வாழ்க்கை

இருட்டுக்குள்ளேயே
இருக்க நிர்ப்பந்திக்கப்படுவதாய்....

த.அகிலன்

No comments: