Thursday, October 05, 2006

பிரிவின் சித்திரம்


எனக்கும்
உனக்குமான இடைவெளி
பிரிவின் சொற்களால்
நிரம்புகிறது…

உதிர்ந்து விழும்
நட்சத்திரத்தின் பேரோசை
பிரிவின் காலடியில்
மௌனித்து வீழ்கிறது.

தாகித்தலையும்
நதியின் தடங்களில்
நான் வரைந்து கொண்டிருக்கிறேன்…
நம் பிரிவின் சித்திரத்தை..

த.அகிலன்

No comments: