Sunday, July 23, 2006

ஒளியின் குரல்.....


தீபங்கள்
பேசத்தொடங்கின
மனிதர்கள்
குரல்களற்றுத்திணற

ஸ்பரிசங்களற்ற
தீபங்களிற்குக் குரலிருந்தது

மௌனத்தின்
வேர்களை அறுத்துக்கொண்டுஷ
துயரின் பாடல்
தொலையத் தொலைய
தீபங்களின் குரல்
காற்றில் எழுகிறது

அது
புனிதங்களின் மொழி

மனிதங்கடந்தவரின்
மறைமொழி

இப்போது
உயிரின் நுனிவரைக்கும்
இறங்குகிறது
தீபங்களின் குரல்

நிச்சயிக்கப்படாத
ஒரு கணத்தில்
தகர்ந்து போகிறது
தீபங்களின் குரல்

மனிதர் மீண்டும்
குரலுற்றார்

உயிர் எரியும் பாடல்
காற்றில் எழுகிறது

1 comment:

கோவி.கண்ணன் [GK] said...

//மௌனத்தின்
வேர்களை அறுத்துக்கொண்டுஷ
துயரின் பாடல்
தொலையத் தொலைய
தீபங்களின் குரல்
காற்றில் எழுகிறது

அது
புனிதங்களின் மொழி//
இந்த கவிதை ஒரு சிலிர்ப்பு
:))