Thursday, July 06, 2006

துயரின் பயணம்....


எப்போதும்
ஏதேனுமொரு
புன்னகையிலிருந்தே
ஆரம்பிக்கிறது துயரம்.

ஓரு
புன்னகையில் இருந்து
மற்றுமோர்
புன்னகைக்கு...

வழிநெடுக
புன்னகைகளை
வாரியணைத்தபடியும்

ஒவ்வொரு
புன்னகையின்
முகத்திலும்
தன்னை
அறைந்தபடியும்
பயணிக்கிறது
துயரம்...

அது தன்
தீராக்காதலோடு
தொடர்ந்தும் இயங்கும்
இன்னொரு
புன்னகையைநோக்கி

த.அகிலன்

1 comment:

கதிர் said...

நல்லா இருக்குங்க.

துயரங்கள் தொடர்ந்தால் வாழ்வில் சுவையேது.

அன்புடன்
தம்பி