Sunday, July 16, 2006

உரசிப்போகும் பட்டாம்பபூச்சி...


நான்
அவளைக்காண்கிறேன்
தேவதைகள் நிரம்பிய தெருவில்
அவளை மட்டுமாய்
தனியே


அவள்
கண்களில் இருந்து பறந்து போகும்
பட்டாம் பூச்சியைக்குறிவைத்து
நடந்தபடியோ
அல்லது
தேவதைகளோடு
கொக்கான் வெட்டியபடியோ
அல்லது
முந்தையநாள் இரவில்
தன்னோடு உறங்கமறுத்த
பூனைக்குட்டியைப்பற்றிய
ஏக்கம் நிரம்பிய
சொற்களோடோதான்
அவள் எப்போதுமிருக்கிறாள்....

எப்போதாவது
நான்
தேவதைகளின் தெருவில்
நடக்க நேர்கையில்
என்னை உரசிச்செல்கிறது
அவள்
கண்களின் பட்டாம்பூச்சி

No comments: