Tuesday, December 12, 2006

கடந்து விடமுடியா நினைவுகள்


நான்
நம்பிக் கொண்டிருந்தேன்
இது நாள் வரையும்

மரணத்தின்
வாசனை மிகும்
ஊரின் தெருக்களைக்
கடந்தாகி விட்டதென்றும்......

நகரத்தின்
இடுக்குகளில்
எனக்கான பூஞ்செடிகள்
காத்துக் கிடக்குமெனவும்.....


தடைகளும் எல்லைகளுமற்று
விரியும்
புதிய வானத்தில்
என்சிறகுகள் கொண்டே
எனக்கான வானவில்லை
வரைந்து விட முடியுமென்றும்.....

நான்
நம்பிக் கொண்டிருந்தேன்
இது நாள் வரையும்.....

மரணத்தின்
வாசனைமிகும்
அத்தெருக்கள் தான்
என்
உள்ளங்கையின் ரேகைகள்
என அறியாது...

த.அகிலன்

4 comments:

ஃபஹீமாஜஹான் said...

"தடைகளும் எல்லைகளுமற்று
விரியும்
புதிய வானத்தில்
என்சிறகுகள் கொண்டே
எனக்கான வானவில்லை
வரைந்து விட முடியுமென்றும்....."

புதிய வானத்தில் உங்கள் சிறகுகள் கொண்டு விடியலையே அழைத்துவரலாம்.

Anonymous said...

நகரத்தின்
இடுக்குகளில்
எனக்கான பூஞ்செடிகள்
காத்துக் கிடக்குமெனவும்.....


தடைகளும் எல்லைகளுமற்று
விரியும்
புதிய வானத்தில்
என்சிறகுகள் கொண்டே
எனக்கான வானவில்லை
வரைந்து விட முடியுமென்றும்.....

நான்
நம்பிக் கொண்டிருந்தேன்
இது நாள் வரையும்.....


nice

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//நகரத்தின்
இடுக்குகளில்
எனக்கான பூஞ்செடிகள்
காத்துக் கிடக்குமெனவும்.....//

கனவுகள் நினைவுகள் நாட்கள் வெகு தூரமில்லை

MSK / Saravana said...

தாள்களிடையில்
தட்டுப் படுகின்ற
உன்
ஞாபக ஸ்பரிசங்கள்
என்
விரல்களில் வழிய

...அருமை...