
என் எதிரேயிருக்கும்
தேனீர்க் குவளையுள்
வீழ்ந்து ஓய்கிறது
மின் விசிறி.....
நான்
மூடப் படாத
கவிதைப் புத்தகத்தை
மறுபடியும் பிரிக்கிறேன்....
தாள்களிடையில்
தட்டுப் படுகின்ற
உன்
ஞாபக ஸ்பரிசங்கள்
என்
விரல்களில் வழிய
இந்தக் கவிதையை
எழுதத்
தொடங்கினேன் ....
கொஞ்சம் கனவுகளோடும் காதல் மற்றும் அதன் வலிகளோடும் வருகிறேன்.ஒரு அகதியாக.....
1 comment:
//தாள்களிடையில்
தட்டுப் படுகின்ற
உன்
ஞாபக ஸ்பரிசங்கள்
என்
விரல்களில் வழிய//
வலைகளில்
வலம் வருகின்ற
இந்தக்கவிதை எங்கள்
இதயம் உட்புகுந்து
என்னவோ செய்கின்றது
Post a Comment