Thursday, December 07, 2006

வற்றிக்கொண்டிருக்கும் பிரியம்..


பிரியத்தின்
சொற்கள் வற்றிக்கொண்டிருந்தன.

தாகித்தலையும்
நம்
இறுதிப்பார்வைகள்
நதியைப்போல்
ஓடிக்கொண்டிருக்கிறது
நமக்கிடையே

பற்றியிருந்த
விரல்கள்
இளகத்தொடங்குகையில்

வானம்
குமுறத்தொடங்கியிருந்தது

இருவரும்
கண்கள்
ஏன் முதுகுகளிடம்
இல்லை என்பதாய்
நடக்கத்தொடங்கினோம்

சுவடுகளைக்
கரைத்தபடி
பெய்து கொண்டிருந்தது
மழை.

த.அகிலன்

3 comments:

ஃபஹீமாஜஹான் said...

நன்றாக இருக்கிறது அகிலன்

ப்ரியன் said...

அருமை அகிலன்.

MSK / Saravana said...

நடக்கத்தொடங்கினோம்

சுவடுகளைக்
கரைத்தபடி
பெய்து கொண்டிருந்தது
மழை.

..மிக சிறப்பு..