Monday, September 25, 2006

பாழடைந்து போகும் நகர்



வெம்பிய நகரின்
கானல்
நீர்மிகும் தெருக்களில்
மழையின்
தேவதைகள் யாரும்
வருவதற்கில்லை

குரல்களற்ற
மனிதர்களின்
கண்கள் ஒளியற்று
மங்கின

நகருக்குள்
தாகித்தலையும்
சாத்தான்கள்
பெருநகரின்
கானல்நீரள்ளிப்பருகி
தெருக்களில்
வேட்டையாடித்திரிந்தன…

இறுதியிலும் இறுதியில்
தேவதைகளின் சாபம்
நகரின் ஓளிவிழுங்க
பாழடைந்து போகிறது
நகர்….

த.அகிலன்

No comments: