Friday, August 24, 2007

இரண்டாம் காதல்....



காற்றுக்கலைத்துப்போன
மேகச்சிற்பத்தின்
மீந்த பாதியைப்போலிருக்கின்றன
உன் நினைவுகள்

நம்
பிரிவின் முதற்கணங்களின்
துளிர்த்த கண்ணீரின்
ஈரம்
உலர்ந்து போய்விட்டிருக்கிறது.

எனக்கு
குழப்பமாயிருக்கிறது..

நேற்றுக்கடந்துபோன
ஒருத்தியிடம்.
எப்படி வந்தன?
உன்
புன்னகையின் ரகசியங்கள்..

2 comments:

theevu said...

அற்புதம்

MSK / Saravana said...

அருமையான கவிதை