Wednesday, August 08, 2007

நிகழாக் கவிதை...


என் கவிதையின்
கரங்கள்நீண்டபடியிருக்கின்றன
சொற்களைத்தேடி….

தாயின் இறகுகளை
நீங்கித் தப்பும்
ஒர் தனியன் குஞ்சைப்போல
சிக்கிக்கொள்ளாது
தப்பியலைகின்றன சொற்கள்…

ஊழியோய்ந்த நிலத்தில்
எஞ்சிய
ஒற்றைக்குழந்தையின்
திணறலென
அழுதபடியிருக்கிறது
என் கவிதையும்
அதன் மனமும்….

3 comments:

Anonymous said...

ஏன் இதெல்லாம் போடுறீங்க

த.அகிலன் said...

சும்மா ரைம்பாஸ்தான் அனானி

Anonymous said...

:) still waiting?