Thursday, July 05, 2007

அம்மம்மாவின் சுருக்குப்பை.....

ஒரு கவிதை
எனை அழைத்துப்போகிறது
ஊருக்கு…..

தும்புமிட்டாஸ் காரனின்
கிணுகிணுப்பிற்கு
அவிழ்கிற
அம்மம்மாவின்
சுருக்குப்பையைப்போல..
அவிழ்ந்து கிளம்புகின்றன
ஞாபகங்கள்….

சிட்டுக்குருவியின்
இறகுகளில்
பின்னப்பட்டிருந்தது வாழ்க்கை..

ஒரு
வேட்டைக்காரனின்
குறிக்குள் வீழ்ந்தபின்
வரையறுக்கப்பட்ட
வானத்திடம்
அதிசயங்கள் ஏது மில்லை….

தடங்கள்
இறுகிக் கொண்டன…

No comments: