Monday, July 02, 2007

நின்று போன கவிதை...


உதிர்ந்து விழுகிற
இலையின்
நடனம்போல
நிகழ்ந்து போகிறது உன் பிரிவு...

அங்கேயே..
அப்போதே..
நின்று போன
என் வார்த்தைகள்
காத்திருக்கும்
மறுபடியும்
கவிதையின் சாலைக்கு
அழைத்துப் போகும்
உன் புன்னகையின் வருகைக்காய்..

3 comments:

Unknown said...

கவிதை நல்லாருக்கு அகிலன்.

காத்திருப்பு, இன்னும் நல்ல கவிதைகளைத் தரட்டும் :)

த.அகிலன் said...

நன்றி அருட்பெருங்கோ...

Jazeela said...

நிறைய புன்னகை உதிரட்டும் நல்ல கவிதைகள் தொடரட்டும்.