Saturday, November 25, 2006

மழை என்னும் பிராணி


திடீரென
முழித்த தூக்கத்தில்

உள்ளே வரத்துடிக்கும்
ஒரு
பிராணியைப்போல
கதவுகளைப்
பிறாண்டிக்கொண்டிருந்தது
மழை

என்
தலையணைக்டியிலிருந்த
கனவுகளையும்
அழைத்துக்கொண்டு
நனையப்போயிருக்கிறது
தூக்கம்

த.அகிலன்

2 comments:

Anonymous said...

What a real!

Anonymous said...

சட்டென்று
பிடித்துப் போகிறது
கவிதை.

மழை போலவே.