Wednesday, August 02, 2006

கனவு வெளி


ஜதார்த்தங்களை
சிலவேளைகளில்
ஜீரணிக்க முடிவதில்லை

மனசின்
வடிவமைப்புக்களிற்கு
வெளியே
தீர்மானிக்கப்படும்
முடிவுகளினால்
நொருங்கும் கனவுகள்

எண்ணங்களிலானது
கனவு வெளி
அவ்வெளியின் மீது
ஏற்றப்பட்டிருக்கிறது
வாழ்வு

சிதைகிற அதற்காய்
அழுகிறது என் மனசு
ஆளறுந்த தெருவின்
ஒற்றைநாயென
பிரக்ஞை அற்று...

வடுக்களின் மீதமர்ந்தும்
மனசு
மிச்சம் வைக்கிறது வாழ்வை
கனவுகளைக் கோர்ப்பதற்காய்

எனினும்

என்
கனவுகளை
கோர்ப்பதற்காய்
எனினும்
என்
கனவுகளை ஓரம் கட்டுகிற
ஜதார்த்தங்களிற்கு
தெரிவதில்லை
கனவுகளின் மீதான
என் மனசின் அக்கறை

த.அகிலன்

No comments: