Monday, July 10, 2006

முழுவதும் உனக்கே..


என் காதலே!

இந்தப் பூமிப்பந்தின்
எல்லா நுனியிலும்
நீதான்
நிறைந்து கிடைக்கிறாய்…..

என் வார்த்தைகள்
திணறும்.

உனை
விபரிக்கச் சொல்லற்றுத்துடிக்கும்
என் கவிதை….

உதிரமுடியாத
ப+க்களை எப்படித்தான்
கைவசம் வைத்திருக்கிறாய்
மாறாச் சிலிர்புடன்
காதலின் தெருக்கள் எங்கும்
விரவிக்கிடக்கிறது பூக்கள்.

குடித்துத் தீர்ந்தபின்பும்
திகட்டித் திகட்டி
மிஞ்சிக்கிடக்கிற
அன்பின் பானமாய்
நிறைந்து வழிகிறாய்..

என்
வாழ்வின்
ஒவ்வொருதுளியிலும்
உனக்குத்தான்பாதி
சீச்சி
முழுவதுமே உனது

த.அகிலன்

3 comments:

Anonymous said...

நடை அழகு,எண்ணம் புதுமை........
எனக்கும் உஙளைப் போல் எழுத ஆசை....எனது கனவுகலளையும் வந்து பாருஙகள்....


கார்த்திக்

Anonymous said...

தம்பி,
யுத்தச் சூழலில் இருந்து கொண்டு இத்தனையையும் செய்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.

பாலசந்தர் கணேசன். said...

இன்னமும் முயற்சிக்க வேண்டும். மற்ற தலைப்புகளில் ஏன் கவிதைகள் ஏன் வருவதில்லை?